உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் அரசியல் ஆதாயத்திற்காக நன்றாக இருந்த ரயில் நிலையத்தை ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்துள்ளது ஒன்றிய மோடி அரசு. அயோத்தி ராமர் கோவில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழ வேண் டும் என்று கூறி மேலும் பல ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட் டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். அரசியலுக்காக அயோத்தி நட்சத்திர ஹோட்டல் போல பொலிவு பெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தின் முக்கிய நகரான கான்பூ ரில் வீடற்ற ஏழை மக்கள், முதிய வர்கள் குளிரைத் தாங்க முடியா மல் சுடுகாட்டில் உறங்கும் அவல மான நிலை உள்ளது. அதாவது ஏழை மக்கள் குளிரைத் தாங்க எரி யும் பிணங்களுக்கு இடையே உயி ருள்ள பிணங்களாக உறங்கும் சூழ லுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அயோத்தியில் அரசியல் ஆதா யத்திற்காக மோடியால் துவங்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி திட் டங்களின் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு வழங்கி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒன்றிய மோடி அரசிற்கு எதி ராக கண்டனங்கள் குவிந்து வரு கின்றன.